சன் தொலைக்காட்சியில் முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பிரபல சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பூவேஉனக்காக தொடர் அடுத்த வாரத்தில் முழுவதுமாக நிறைவடைய போகிறது. திடீரென சீரியலை முடிப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
பூவே உனக்காக
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாகவே டிஆர்பியில் தொடர்ந்து முதல் 5 இடத்தை சன் தொலைக்காட்சி சீரியல்கள் தான் பிடித்து வருகின்றன. இந்தவகையில் சன் தொலைக்காட்சியில் இரவு 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பூவே உனக்காக தொடர் திடீரென நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் ஆரம்பித்த போது முதன் முதலில் 8 மணிக்கு ஒளிபரப்பு செய்தனர். இதன் பின்னர் 10 மணிக்கு பூவேஉனக்காக தொடர் ஒளிபரப்பாகும் என அறிவித்தனர்.
பாரதி, கண்ணம்மாவின் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் – புதிய ட்விஸ்ட்களுடன் சீரியல்!
பின்னர் மீண்டும் ஒளிபரப்பப்படும் நேரத்தை மாற்றி தற்போது 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் சீரியல் துவங்கிய சில நாட்களிலேயே கதாநாயகர் சீரியலை விட்டு விலகினார். அதனை தொடர்ந்து கதாநாயகியும் சீரியலை விட்டு விலகினார். இருந்தாலும் கூட பூவே உனக்காக தொடர் நன்றாக ஓடி கொண்டிருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 18ஆம் தேதியுடன் பூவே உனக்காக தொடர் முழுவதுமாக நிறைவடைய போகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த செய்தி ரசிகர்களுக்கு மட்டும் அதிர்ச்சியை கொடுக்கவில்லை. அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது சீரியல் நிறைவடைய போகிறது என்பது தெரியாமலேயே கடைசி நாள் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளனர். சூட்டிங்கில் நடித்து முடித்த பிறகுதான் இதுதான் கடைசி நாள் ஷூட் என்பதே அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அதாவது பல நாட்களாகச் பூவே உனக்காக சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. சீரியல் நிறைவடைய போகிறது என்பதை நடிகர்களுக்கு கூறினால் சம்பளத்தை கேட்டு நச்சரிப்பார்கள் என்பதால் யாருக்கும் சொல்லாமலேயே சீரியலை முடித்துவிட்டனர்.