சன் டிவி ‘நாதஸ்வரம்’ சீரியல் பிரபல நடிகை கூறிய ஷாக் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
நாதஸ்வரம் சீரியல் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பென்ஸி பிரிங்க்ளின். தற்போது இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்த அனுபவம் குறித்தும் இவர் வாழ்வில் பட்ட துயரங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
நாதஸ்வரம் சீரியல்:
திரை பிரபலங்களை விட சீரியல் பிரபலங்கள் தான் அதிக அளவில் மக்களின் மனதில் விரைவில் இடம் பிடித்துவிடுகின்றனர். மேலும், அந்த சீரியல் மற்றும் கதாபாத்திரங்களுடன் மக்கள் ஒன்றிணைந்துவிடுகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் அதிகமாக விரும்பி பார்த்த சீரியல் என்றால் அது நிச்சயமாக நாதஸ்வரம் சீரியல் தான். நாதஸ்வரம் தொடரில் கோபிகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் இயக்குனர் திருமுருகன் நடித்திருப்பார். மேலும், மயில்வாகனமாக பூவிலங்கு மோகனும், மலர்க்கொடியாக நடிகை ஸ்ருதிகா நடித்திருப்பார். இந்த தொடர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகியிருக்கிறது.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் வரப்போகும் திடீர் திருப்பம் – சிறைக்கும் செல்லும் பாக்கியா!
அந்த வகையில் நாதஸ்வரம் தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் பென்ஸி பிரிங்க்ளின். தற்போது இவர் இந்த தொடரில் நடித்த அனுபவம் பற்றி கூறியுள்ளார். இயக்குனர் திருமுருகனிடம் இருந்து நான் நிறையவே கற்று கொண்டேன். என் வாழ்க்கையிலும் பல பாடங்களை இவரின் மூலமாக கற்றுக்கொண்டேன். நாதஸ்வரம் சீரியல் முடியும் நேரத்தில் தான் எனக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு எனது திருமணம் வெற்றியை கொடுக்கவில்லை. எனக்கு பிறகு இரண்டு தங்கைகள் இருந்த காரணத்தினால் ஆரம்பத்தில் விவாகரத்து வாங்க தயங்கினேன். பின்பு, இதற்கு மேலும் பிடிக்காத வாழ்க்கையில் இருந்து கஷ்டப்பட கூடாது என நினைத்து திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறினேன்.
விஜய் டிவி அர்ச்சனாவின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட நபர் – அவரே அளித்த ‘நச்’ பதிலடி!
விவாகரத்துக்கு பிறகு இயக்குனர் திருமுருகன் மற்றும் என்னுடன் சேர்ந்து நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருமே இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர உதவினர். இதற்கு பிறகு தான் எனக்கு கல்யாண வீடு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் இயக்குனர் திருமுருகன் புதிதாக ஏதேனும் சீரியல் ஆரம்பித்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும், சாகும் வரைக்கும் எனக்கு நடித்து கொண்டே இருக்க வேண்டும். அது தான் என்னுடைய மிக பெரிய ஆசை எனவும் கூறியுள்ளார்.