சன் டிவி “நாதஸ்வரம்” சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
சன் டிவி
சன் டிவி "நாதஸ்வரம்" சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சன் டிவி “நாதஸ்வரம்” சீரியல் நடிகையின் சோகமான திருமண வாழ்க்கை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாதஸ்வரம் சீரியல் இன்னும் பலரால் மறக்க முடியாத தொடராக இருக்கிறது. இந்த நாதஸ்வரம் தொடரில் காமுவாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பென்ஸி பிரிங்க்ளின். அவருடைய சோகமான திருமண வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

நடிகை பென்ஸி பிரிங்க்ளின்:

சன் டிவி சீரியல்கள் என்றாலே அந்த காலம் முதல் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் கின்னஸ் ரெக்கார்ட் பெற்ற சீரியல் தான் நாதஸ்வரம். இந்த சீரியலில் கதாநாயகனாக அதே சீரியலின் இயக்குனர் திருமுருகன் நடித்து வந்தார். அந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. நாதஸ்வரம் சீரியலில் காமு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பென்ஸி பிரிங்க்ளின். குடும்ப பாங்கான அவருடைய முகத்திற்கும் நடிப்பிற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

இந்நிலையில் அவர் அந்த சீரியலுக்கு பின் கல்யாண வீடு சீரியலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் “என்னோட அப்பாவுக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்கணும் என்ற ஆசை. அவர் இந்தியன் பேங்க் மேனேஜர் பதவியில் இருந்தாலும் கூட ஆடிசனுகளுக்காக பல இடங்களுக்கு போவார். அப்படிப் போகும்போது ஒரு முறை நானும் அவருடன் போனேன். அங்கே என்னை பார்த்துவிட்டு ஒருத்தர் குழந்தையாக சீரியலில் நடிக்க பொருத்தமாக இருப்பேன் என்று சொன்னார்.

அந்த நேரம் நான் ஆறாம் வகுப்பு தான் படித்தேன். அப்போது இருந்தே எனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தது. பின் விஜய் டிவி உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் கலந்துகொண்டு செலக்டட் ஆனேன். எனக்கு கிளாசிகல் மட்டும்தான் தெரியும். வெஸ்டர்ன் தெரியாது என்பதால் நான் கத்து கொண்டேன். அப்போது என்னுடைய உடலை குறித்து பலரும் விமர்சனம் செய்து பேசி வந்தார்கள். அதன் பின் வசந்த் டிவியில் ஆங்கராக பயணத்தை தொடங்கி அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் என்னுடைய பங்களிப்பை கொடுத்தேன். காலேஜ் முடித்த பின் நடிக்க ஆசை வந்தது. பின் திருமுருகன் சாரை பார்த்து வாய்ப்பு கேட்டேன். அதற்கு பிறகுதான் நாதஸ்வரம் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மூலம் பல விஷயங்களை திருமுருகன் சாரிடம் கற்றுக்கொண்டேன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

நாதஸ்வரம் சீரியல் முடியும் நேரத்தில் எனக்கு வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் நடந்தது. கல்யாண வாழ்க்கையில் நல்லா இல்லையென்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். ஆரம்பத்தில் மெண்டல் பிரஷர் ரொம்ப இருந்தது. நான் எல்லா பெண்களிடையே சொல்வது ஒரே ஒரு விஷயம் தான். நீங்கள் என்ன படித்து இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு வேலை இருக்கணும். விவாகரத்து ஆனதும் கூட என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. ரொம்ப வலியாக இருந்தது. எனக்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்தார்கள். நான் விவாகரத்து வாங்கினால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று தயக்கம் இருந்தாலும் இதுக்கு மேல இந்த ரிலேஷன்ஷிப் தொடர முடியாது என்று என் அம்மா அப்பாவிடம் புரியும் படி சொன்னேன். தற்போது இன்னொரு கல்யாணத்தை பற்றி நினைக்கவே முடியவில்லை என மனம் திறந்து பேசி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!