சன் டிவி கயல் சீரியல் நடிகை திடீர் விலகல்? ரசிகர்கள் ஷாக்! அவரே சொன்ன விளக்கம்!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வந்து பின் திருமணம் செய்து கொண்டவர்கள் தீபக் மற்றும் அபிநவ்யா ஜோடி. இந்நிலையில் அபி நவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், கயல் சீரியலில் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் TRPயில் டாப் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சய் மற்றும், ஹீரோயினாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடித்து வருபவர் அபிநவ்யா. சின்னத்திரையில் செய்திவாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின் சன் டிவியின் பிரியமானவள் சீரியலிலும், கண்மணி சீரியலிலும் நடித்து பிரபலமானார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் பின் தற்போது முன்னணி சீரியலில் ஒன்றான கயல் சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சின்னத்திரை நடிகர் தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த அழகான ஜோடி விரைவில் பெற்றோர்களாக இருப்பதாக கடந்த வாரம், அவர்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தனர்.
அவார்ட் நிகழ்ச்சியில் கோபிக்கு நெத்தியடி பதிலடி கொடுத்த பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!
Exams Daily Mobile App Download
அதனால் அபி நவ்யா தொடர்ந்து கயல் சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து அபிநவயா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று அபிநவ்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கயல் படப்பிடிப்பு தலத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து அதில் அனைவரையும் மிஸ் செய்வதாக பதிவிட்டார். அதனால் அவர் சீரியலை விட்டு விலக போறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் கேட்டு வந்த நிலையில், அதற்கு அவர் இல்லை. ஆனால் சீரியலில் பெரிய திருப்பம் ஒன்று வர இருப்பதாக தெரிவித்துள்ளார். அது என்ன திருப்பம் என ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.