யுவா, மீராவை வீட்டை விட்டு வெளியே துரத்தும் அப்பா – ‘கண்ணனா கண்ணே’ ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “கண்ணனா கண்ணே”. இந்த தொடரின் ட்விஸ்ட்டான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
“கண்ணனான கண்ணே” சீரியல்
சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற சீரியல் தான், “கண்ணனா கண்ணே”. அப்பா மற்றும் மகளுக்கு இடையேயான பாச போராட்டத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தற்போது நாயகன் யுவாவை திருமணம் செய்து கொள்ள ப்ரீத்தி மறுத்து விடுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதிகள் மாற்றம் – கல்வி துணை இயக்குனர்!
தனது அக்கா மீராவிற்காக தான் இந்த திருமணத்தை வேண்டாம் என்று நிராகரித்ததாக ப்ரீத்தி கூறி விடுகிறார். இதனால் மீராவை யுவாவிற்கு திருமணம் செய்து வைப்பேன் என்று மீராவின் அம்மா கூறி திருமணமும் நடைபெற்று முடிகிறது. தனது அப்பா சரி என்று கூறினால் தான், திருமணம் செய்து கொள்வேன் என்று மீரா கூறி விடுவதால், வேறு வழி இல்லாமல் அவரது தந்தையும் இறுதியில் ஒத்துக்கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
இன்று இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் யுவா மற்றும் மீரா இருவரும் திருமணம் செய்து கொண்டு யுவாவின் வீட்டில் இருக்கின்றனர். யுவா மற்றும் மீராவிற்கு பால் மற்றும் பழம் கொடுத்தும், மீராவை விளக்கேற்ற கூறுகின்றனர். அப்போது யுவாவின் அப்பா மீராவை தடுத்து விடுகிறார். அதே போல் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என கூறுகிறார். இதனால் யுவாவிற்கு கோபம் வந்து விடுகிறது. மீராவிற்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் கோபம் கொள்ளும் யுவாவின் தந்தை இருவரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். புதிய ட்விஸ்ட்டோடு வெளியாகி இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.