சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து விலகிய முன்னணி நடிகை – ரசிகர்கள் ஷாக்!
சன் டிவியில் TRP யில் போட்டி போடும் சீரியல்களில் ஒன்று தான் “கண்ணான கண்ணே” சீரியல். இதில் முன்னணி நடிகர் பிரித்வி ராஜின் இரண்டாவது மனைவியாக நடிக்கும் நடிகை நித்யாதாஸ் தற்போது சீரியலில் இருந்து விலகி இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நடிகை மாற்றம்:
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி மரியாதை உண்டு, கின்னஸ் ரெக்கார்ட் செய்யும் அளவிற்கு சீரியல்கள் ஒளிபரப்பாகிய நிலையில், தற்போது கால மாற்றத்திற்கு ஏற்றார் போல இளசுகள் முதல் பெருசுகள் வரை ரசித்து பார்க்கும் கதை உடன் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் முன்னணி நடிகை நடிகர்கள் நடிக்கும் ஒரு சீரியல் தான் “கண்ணான கண்ணே” சீரியல். இந்த சீரியலில் நடிகர் ப்ரித்வி ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா – ரசிகர்கள் வாழ்த்து!
அப்பா மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் TRPயில் இந்த சீரியல் முதல் 5 இடங்களில் இருக்கிறது. சன் டிவி சீரியல்களில் தொடர்ந்து பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த சீரியலிலும் ஒரு மாற்றம் நடைபெற இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வரும் நடிகை நித்யாதாஸ் தற்போது யமுனா கதாபாத்திரத்தில் இருந்து விலக இருக்கிறாராம்.
தனது கணவரை பற்றி முதன்முறையாக மனம் திறந்த “பிக் பாஸ்” பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
அவருக்கு பதில் புதிய யமுனாவாக நடிக்க வருவது யார் என்றும் தெரியவில்லை, அவர் திடீரென விலகியது ஏன் என்பதும் தெரியவில்லை. டாப் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை திடீரென விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அவர் பல படங்களில் நடித்து விருதுகளை பெற்றுள்ள நிலையில் அவருடைய விலகல் கண்ணான கண்ணீர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.