8 ஆண்டுகளுக்கு பின் சன் டிவி சீரியல் படைக்க போகும் கின்னஸ் சாதனை – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த நாதஸ்வரம் சீரியல் 1 மணி நேரம் நேரலையில் ஒளிபரப்பானதை நாம் மறந்திருக்கமாட்டோம். அந்த வகையில் அந்த சீரியலுக்கு அடுத்த படியாக 8 ஆண்டுகளுக்கு பின் சன் டிவியில் பிரபலமான சீரியல் ஒன்று, ஒரு மணி நேரம் நேரலையில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நேரலையில் சீரியல்:
சீரியல்கள் என்றாலே நமது மனதில் நினைவிருக்கு வருவது சன் டிவி சீரியல்கள் தான். அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகி முடிந்த சீரியல் தான் நாதஸ்வரம். இந்த சீரியலில் 1000வது எபிசோட்டை முன்னிட்டு ஒரு மணி நேரம் நேரலையில் சீரியல் எடுக்கப்பட்டு ஒளிபரப்பானது. அதாவது சீரியல் காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்து சாதனை படைத்தார்கள். அந்த சீரியல் கின்னஸ் ரெகார்ட் படைத்தது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சன் டிவி சீரியல் ஒன்றில் இது போல நேரலையில் காட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சன் டிவி யில் டாப் 3 இடத்தில் இருக்கும் சுந்தரி சீரியல் வருகிற வியாழன் அன்று 1 மணி நேரம் நேரலையில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேரலையில் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னதாக பல முறை ரிகர்சல் பார்த்து, சீரியல் காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகள் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ரசிகர்கள் வியாழக்கிழமை ( நவ 3) இரவு 7 மணிக்கு சுந்தரி சீரியல் பார்க்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.