சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில் முடிவுக்கு வரும் முக்கிய கதாபாத்திரம் – சோகத்தில் ரசிகர்கள்!
சன் டிவியில் நல்ல ஒரு கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “எதிர்நீச்சல்”. இந்த சீரியலில் பட்டம்மாள் கதாபாத்திரம் பேச தொடங்கியது முதல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் பட்டம்மாள் கதாபாத்திரம் முடிய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்:
பொதுவாக பெண்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு பெண் வாழ்க்கையில் எந்த அளவிற்கு படித்து முன்னேற வேண்டும் என்பதை கதையாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “எதிர்நீச்சல்”. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்று தான் பட்டம்மாள் கதாபாத்திரம். அவர் பேச தொடங்கியது முதல் கதையில் பல திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.
அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டை காலி செய்து வெளியேற்றம் – ஷாக்கிங் காரணம்!
Exams Daily Mobile App Download
அவர் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் ஜனனி மூலமாக தான் செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு தடையாக குணசேகரன் இருப்பது போலவும் காட்டப்பட்டு வருகிறது. மேலும் பட்டம்மாள் கதாபாத்திரத்தை கதைக்காக முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜனனி பட்டம்மாள் பாட்டி இல்லாமல் வீட்டில் இருக்கும் 3 பெண்களை எப்படி முன்னேற்றி கொண்டு வருவார் என்பது இனி வரும் சீரியல் கதையாக இருக்க போகிறது. மேலும் இன்றைய எபிசோடில் இருந்து பட்டம்மாள் கதாபாத்திரம் இருக்காது என்பதால் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கின்றனர்.