அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை? அரசு விளக்கம்!
அசாம் மாநிலத்தில் ஜூலை 1 முதல் 27ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை தற்போது பார்ப்போம்.
கோடை விடுமுறை
இந்தியா முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளில் பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது பல மாநிலங்களில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ஜூலை 1 முதல் 27ம் தேதி வரை அளிக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் அசாம் மாநிலத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அத்துடன் தொடரும் கனமழை காரணமாக கடந்த வாரத்தில் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
MCL மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.90,000 ஊதியத்தில் வேலை – டிகிரி முடித்தவர் விண்ணப்பிக்கலாம்..!
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 1 முதல் 27ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோடை விடுமுறை 5 நாட்களுக்கு முன்பாக அதாவது இன்று முதல் (ஜூன் 25) ஜூலை 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த கல்வியாண்டு ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.