1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு | மே 2 – ஜூன் 12 வரை கோடை விடுமுறை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விதர்பா பகுதியில் கோடை வெயில் அதிகமான காரணத்தினால் அந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகள் ஜூன் 27ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அதனால் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் குறைந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டு வருடமாக ஆன்லைன் முறையில் பாடம் கற்பித்து வந்தனர். பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அதிகமாக விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் கூட பள்ளி வேலை நாட்களாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகளை வைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. வழக்கமாக தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ம் தேதி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
ExamsDaily Mobile App Download
மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.