பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் மகாராஷ்டிராவில் கோடை விடுமுறைக்காக மே 2 முதல் ஜூன் 12 வரை பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநில அரசு அறிவிப்பு:

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஓய்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்களும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வந்தனர். இதையடுத்து கொரோனா மூன்றாவது அலை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தீவிரமடையத் தொடங்கியது. இதனால் மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளை ரத்து செய்து, மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்களின் பெற்றோர் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

இதனை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு அரசு திங்கள்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்படும் என குறிப்பிட்டு உள்ளது. கடுமையான வெப்பமான வானிலை மற்றும் நிலவும் சூழ்நிலைகள் காரணமாக, மாநிலத்தில் பள்ளி நேரத்தைக் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதுவரை சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை

Exams Daily Mobile App Download

கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்க படாததால் ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் தொடரும் என்றும், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை மே 2 முதல் ஜூன் 12 வரை இருக்கும் என்று அரசு தீர்மானம் தெரிவித்துள்ளது. அங்குள்ள அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, ஜூன் 27 அன்று தொடங்கும் விதர்பாவைத் தவிர, பள்ளிகள் தங்கள் புதிய கல்வியாண்டை ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்று குறிப்பிட்டு உள்ளது. மகாராஷ்டிரா SSC, HSC தேர்வுகள் 2022 ஏற்கனவே மாநில வாரியத்தால் நடத்தப்பட்டுள்ளன. 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!