1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை குறித்த மாநில அரசுகளின் அறிவிப்புகள்!
கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு அதிகமான வெப்பம் நிலவி வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டன. பின்பு, ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் மாணவர்களுக்கு பழையபடி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக சரியாக பாடத்திட்டங்களும் நடத்தவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (மே 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இத்தேர்வுகளும் நடத்தாத காரணத்தினால் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கின்றன. மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்படைந்துள்ளதால் பல மாநிலங்களில் மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு தான் அதிகமான வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக சில மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்றிலிருந்து ஜூன் 17 ஆம் தேதி வரை உள்ள 27 நாட்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மே 23 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை உள்ள 24 நாட்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் கோடை விடுமுறையாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2 முதல் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 12 ஆம் தேதி அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும். பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது