கோடை விடுமுறை குறைப்பு, மே 16 முதல் பள்ளிகள் தொடங்கும் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
கோடை விடுமுறை குறைப்பு, மே 16 முதல் பள்ளிகள் தொடங்கும் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
கோடை விடுமுறை குறைப்பு, மே 16 முதல் பள்ளிகள் தொடங்கும் - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
கோடை விடுமுறை குறைப்பு, மே 16 முதல் பள்ளிகள் தொடங்கும் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகா மாநில பள்ளி கல்வித்துறை, மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்களை குறைத்து, புதிய கல்வி ஆண்டு மே 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கல்வித்துறை முக்கிய அறிவிப்பு:

கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த ஆண்டு பரவல் சற்று கட்டுக்குள் வந்து உள்ளதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது தாக்கம் குறைந்து மீண்டும் நேரடி வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய அறிவிப்பு!

அது போல் 10 ஆம் வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாட்களை குறைத்து, புதிய கல்வி ஆண்டு மே 16 முதல் தொடங்கும் என தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டுகளில் மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதால், நடப்பு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை நாட்களை குறைத்து, 2022-23 கல்வியாண்டிற்கான புதிய கல்வி காலண்டரைக் வெளியிட்டு உள்ளது. மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்ய 26 கூடுதல் நாட்களுடன் ஆண்டு முன்கூட்டியே தொடங்கி தாமதமாக முடிவடையும்.

மேலும் புதிய கல்வியாண்டின் முதல் பருவம் மே 16 ல் தொடங்கி அக்டோபர் 2, 2022 அன்று முடிவடையும். இரண்டாவது 2022 அக்.17 ல் தொடங்கி ஏப். 10, 2023 அன்று முடிவடையும். கோடை விடுமுறைகள் 48 நாட்களாக குறைக்கப்பட்டு தசரா 14 நாட்கள் வரை விடுமுறை. மேலும் 330 நாட்களில் தசரா, கோடை மற்றும் அரசு விடுமுறை உட்பட 60 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். இணை பாடத்திட்ட நடவடிக்கைகள், தேர்வுகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள், உல்லாசப் பயணம் மற்றும் செயல்பாடுகள் 28 நாட்கள் ஆகும், இதனால் மீதமுள்ள 228 நாட்களில் வகுப்புகள் நடத்தப்படும். ஒரு நாளில் வகுப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இந்த கல்வியாண்டு முதல் பள்ளி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!