தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – அரசு திடீர் அறிவிப்பு!
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்ற காரணத்தினால் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனை மீட்டெடுப்பதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
எண்ணும் எழுத்தும்:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் இந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் இல்லாமல் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. மேலும் இந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்றதனால் கல்வித் திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பல மாநிலங்களில் மாணவர்களின் கல்வி திறனை மீட்டெடுப்பதற்காக கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்களில் மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மே 13ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எதுவும் வைக்கப்படாத காரணத்தினால் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இழந்த கல்வித்திறனை மீட்டெடுப்பதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் என்கிற பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. கட்டாயமாக இந்த எண்ணும் எழுத்தும் என்கிற பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கல்வித் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். திடீரென தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் கோடைவிடுமுறை குறைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.