தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை குறைப்பு – ஜூன் 6 முதல் வர உத்தரவு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 14 முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ஜூன் 5ம் தேதி முதல் முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் இறுதித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது அனைத்து மாணவர்களுக்கும் இறுதித்தேர்வு அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு கொரோனா காரணமாக கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அதனால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் கடந்த மே மாதம் தான் தொடங்கியது. அத்துடன் கோடைகாலம் தொடங்கியதால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மட்டும் கடந்த மே 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள். இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை இறுதித்தேர்வு நடைபெற்றது.
CBSE பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 14ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் ஆசிரியர்களுக்கு வருகிற ஜூன் 5ம் தேதியுடன் விடுமுறை முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித் துறை நடத்தும் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பில் வருகிற 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.