ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

0
ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு முடிவு!
ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு - மாநில அரசு முடிவு!
ஜூன் 1 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு முடிவு!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் அட்டவணையை அரசு திருத்தியுள்ள நிலையில், இன்று (மே.14) முதல் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறையானது ஜூன் 1 முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை

நாடு முழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பல்வேறு மாநில அரசுகள், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அதாவது மே 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறையை ஜூன் 1ம் தேதிக்கு தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூன் 1 முதல் 30 வரை பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இது குறித்த ஒரு அறிக்கையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டுகளை போல் கோடை விடுமுறையை வழங்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது, மாநில கல்வித் துறை தனது முடிவை மறுபரிசீலனை செய்து கோடை விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் மே 15 முதல் மே 31 வரை ஆஃப்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – நாளை சிறப்பு முகாம்!

அதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆப்லைன் வகுப்புகள் பல நாட்களாக தடைபட்டன. இதனால் மாணவர்களின் படிப்பு மோசமாக பாதிக்கப்பட்டது. எனவே, கோடை விடுமுறையை முன்பு போல் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது மே 15 முதல் மே 31 வரை, தொடக்கப் பள்ளிகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும் திறக்கப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!