பள்ளிகளில் கோடை விடுமுறை ஜூன் 15 வரை நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஹரியானா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகளில் கோடை விடுமுறை ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1.86 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
TN Job “FB Group” Join Now
ஹரியானா மாநிலத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் ஜூன் 15 வரை கோடை விடுமுறை அறிவிப்பை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 31 வரை பள்ளிகளில் கோடை விடுமுறையை மாநில அரசு அறிவித்திருந்தது.
முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 7க்கு மேல் நீட்டிப்பு – நிபுணர்கள் வலியுறுத்தல்!!
இருந்தபோதிலும் ஜூன் 1 முதல் ஆசிரியர்கள் 50 சதவிகிதம் பேர் மட்டுமே பணிக்கு வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் அறிக்கை அட்டைகளைத் தயாரிப்பது, சேர்க்கை தொடர்பான பணிகளை கவனித்துக் கொள்வது போன்ற தேவையான கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.