பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை 51 நாட்கள் கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
உத்திர பிரதேச மாநிலத்தில் வரும் மே 21 முதல் ஜூன் 30 வரை உள்ள 51 நாட்களுக்கு கோடை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. மேலும், டெல்லியில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்படைவதன் காரணமாக கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
கொரோனா பரவலின் காரணமாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாகவே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் மீண்டும் பழையபடி பள்ளிகள் துவங்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – IVR சேவை அறிமுகம்!
கொரோனா பரவல் தற்போதும் அதிகரித்து வரும் காரணத்தினால் மாணவர்கள் மாஸ்க் அணிந்து தான் பொதுத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்ட காரணத்தினால் மாணவர்களின் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு தான் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் உத்திர பிரதேச மாநிலத்தில் வரும் மே 21 முதல் ஜூன் 30 வரை பள்ளிக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநிலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு ஜூன் 18 முதல் ஜூன் 28 வரை உள்ள 10 நாட்களுக்கு மட்டுமே கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலுமே மாணவர்களின் கோடை விடுமுறையை குறைந்துள்ளனர். அடுத்த கல்வியாண்டில் கோடை விடுமுறை வழக்கம் போல விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.