1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 9 கோடை விடுமுறை தொடக்கம்!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை
இந்தியாவில் சமீப காலமாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் வெப்பநிலை அதிகரிப்பது உண்டு. ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த சூழலை கவனத்தில் கொண்ட ஆந்திர பிரதேச மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறையை அளிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 9 முதல் கோடை விடுமுறை துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவின்படி, 2022-23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூலை 4 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவும் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஆந்திரா மாநில பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
ExamsDaily Mobile App Download
எனினும், இந்த ஆண்டு தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 9 வரை நடைபெற இருக்கிறது. இதனுடன் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 22 முதல் மே 4 வரை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இத்தேர்வுகள் முடிந்ததும் மே 9 முதல் ஜூன் 3 வரை கோடை விடுமுறை விடப்படும். இது தவிர ஆந்திராவில் உள்ள ஜூனியர் கல்லூரிகளுக்கு மே 25 முதல் ஜூன் 20 வரை கோடை விடுமுறை அளிக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.