இன்று (மே 6) முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை துவக்கம் – ஜூலை 4 முதல் மீண்டும் வகுப்புகள் திறப்பு!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 6ம் அதாவது இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு விடுமுறை முடிந்ததும் ஜூலை 4 முதல் அடுத்த கல்வியாண்டு துவங்க இருக்கிறது.
கோடை விடுமுறை
நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று முதல் கோடை விடுமுறை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் மீண்டும் DA உயர்வு!
இது குறித்த உத்தரவுகளை பிறப்பித்த பள்ளிக் கல்வி ஆணையர் எஸ்.சுரேஷ் குமார், ‘ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 6 முதல் ஜூலை 3 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும். மேலும், 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகளை மே 4ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்ததும் ஜூலை 4 முதல் அடுத்த கல்வியாண்டு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது, பள்ளிகளில் SA-II தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கும், ஆன்லைனில் மதிப்பெண்களைப் பதிவேற்றுவதற்கும், பதவி உயர்வு பட்டியல்களைத் தயாரிப்பதற்கும், அடுத்த கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கை பணிகளுக்காகவும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (மே.6) முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை துவங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.