மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விதர்பா பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் பள்ளிகள் ஜூன் 27ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருடமாக பள்ளிகளும்,கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். இந்த வருடம் கொரோனா வைரஸ் குறைந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது. அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் பாடங்களை முடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
TN TRB தேர்விற்கு விண்ணப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன்படி, அமைச்சர் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்பட்ட பாடப்பகுதிகளில் மட்டும் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். எல்லா வருடமும் கோடை வெயிலுக்கு ஏப்ரல் பாதி நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் ஆனால் இந்த வருடம் தாமதமாக பள்ளிகளை திறந்ததால் தேர்வுகளை ஏப்ரல் கடைசியில் ஆரம்பித்து மே மாதம் முதல் வாரங்கள் வரை நடத்த உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகளை வைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது. விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.