பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை, மீண்டும் திறப்பு எப்போது? கல்வித்துறை அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதர்பா பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
2021-22ம் கல்வியாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதுமாக காணொளி காட்சியிலேயே சென்ற நிலையில் இந்த ஆண்டு பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்து உள்ளதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு தற்போது தாக்கம் குறைந்து மீண்டும் நேரடி வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பு – பிரதமர் எச்சரிக்கை!
கோடை காலம் ஆரம்பித்து விட்டால் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் கோடை விடுமுறை எப்போது என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக குழப்பமான சூழல் நிலவி வந்தது. எனவே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்தனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை விடப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்கமாக தேர்வு முடிந்த பின்னர் ஏப்ரல் 15ம் தேதியே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இன்னும் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படாததால் ஏப்ரல் 30ம் தேதி வரை வகுப்புகள் தொடரும் என்றும், மே 2ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை மகாராஷ்டிரா கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். விதர்பா பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக அங்கு மட்டும் ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.