கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு? மாணவர்கள் கவனத்திற்கு!
மாநிலம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருவதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு கோடை விடுமுறையை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
கோடை விடுமுறை நீட்டிப்பு:
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி வகுப்புகளும், தேர்வுகளும் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் தேர்வுகளும் நடத்தப்பட்டு, முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தமிழகம் உட்பட ஒரு சில மாநிலங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 13 அன்று திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூன் 26-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், அதில்,நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு கோடை விடுமுறையை ஜூன் 26, 2022 வரை நீட்டித்துள்ளது.
தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவை தெரிந்து கொள்வது எப்படி?
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மணீஷ் ஜெயின் குறிப்பிட்டுள்ளார். கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக, வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது