தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை கட் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு மற்றும் தேர்வுக்கு பிறகு அளிக்கப்படும் கோடை விடுமுறை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களைத் தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும். தேர்வுக்கான பாடங்கள் நடத்தாமல் இருந்தால் அவற்றை விரைவில் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு பரிசீலனை!
தற்போது கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது என்று கூறினார். இந்த நிலையில் மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.