தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறையை அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மே 4) முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கோடை விடுமுறை
நாடு முழுவதும் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் வெப்பநிலை சூழலை கவனத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை வெப்ப நிலையை கருத்தில் கொண்டு ஆரம்ப பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை அறிவிப்பது குறித்த அறிவிப்பு இன்று (மே.4) வெளியாகும் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்த வெப்பநிலை வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரும் என்பதை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இத்தேர்வுகள் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.
இருப்பினும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் முக ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (மே.4) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.