பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு – கல்வித்துறை தீவிர ஆலோசனை!
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதை ஈடு செய்யும் விதமாக கோடைவிடுமுறையில் 15 நாட்கள் குறைக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டை 15 நாட்களுக்கு முன்பு தொடங்க பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
தீவிர ஆலோசனை:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களில் அதிகம் பாதிப்புக்கு உள்ளானது மாணவர்களின் நேரடி கல்வி முறை தான். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா அச்சத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது, இதனால் மாணவர்களின் கல்வி அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இதை சரி செய்யும் விதமாக கோடை விடுமுறை நாட்களை குறைக்க ஆலோசிக்கப்படுகிறது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! முழு விபரங்கள் இதோ!
மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரி கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் நேரடி கல்வி முறை பாதிக்கபட்டதை சரி செய்யும் நோக்கத்தில், கோடை விடுமுறைகளில் 15 நாட்கள் குறைத்து, அடுத்த கல்வியாண்டை 15 நாட்களுக்கு முன்பு தொடங்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும், தற்போது பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட அட்டவணையின்படி, ஏப்ரல் 29ல் கோடை விடுமுறை தொடங்கி, மே 30 ல் முடிவடையும். மேலும் புதிய நடைமுறையின்படி, அடுத்த கல்வியாண்டில் வகுப்புகள் மே15 ல் தொடங்கும் என்றும் அதிகாரி கூறினார்.
தமிழக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!
இது குறித்து மாநில உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது, மாணவர்களின் கல்வி திறனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க தயார் என்றும், இருப்பினும் அரசு இதுபோன்ற முடிவுகள் எடுக்கும் போது, ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தை பற்றியும் ஆலோசிக்க வேண்டும் என்றும் கோடை விடுமுறையிலும் SSL தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து எங்களையும் விடுமுறை இல்லா ஊழியர்களாக கருதி, அதற்கேற்ற சலுகைகள் வழங்க வேண்டும் என்று மாநில உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.