ஜூன் 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து பள்ளிகளுக்கான புதிய கல்வியாண்டு ஜூலை 1 முதல் ஆரம்பமாக இருக்கிறது.
கோடை விடுமுறை
இப்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1, 2022 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மூடப்படும். மாணவர்களுக்கான புதிய கல்வி அமர்வு ஜூலை 1, 2022 முதல் தொடங்கும். அரசின் இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
PM KISAN திட்ட பயனாளிகளுக்கு 3 நாட்களில் ரூ.2000 தவணைத்தொகை கிடைக்குமா? முழு விபரம் இதோ!
இப்போது அம்மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலுக்கு மத்தியில், பள்ளிகள் செயல்படும் நேரங்களையும் அரசாங்கம் திருத்தியுள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட அட்டவணையின்படி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஹரியானா மாநில அரசாங்கம், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறையை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த கோடை விடுமுறையின் போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இப்போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் கல்வியை தொடருவதற்கு வசதியாக, ஹரியானா அரசு தனது லட்சிய திட்டத்தின் கீழ் இலவசமான டேப்லெட்டுகளை வழங்கி இருக்கிறது. இதனுடன் தனிப்பயனாக்கப்பட்ட தகவமைப்பு கற்றல் மென்பொருள் மற்றும் 2GB இலவச தரவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.