ஜூலை 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – ஜூன் 30ம் தேதி வரை விடுமுறை!
வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
கோடை விடுமுறை
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1, 2022 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மூடப்படும். இந்த பள்ளிகளுக்கான புதிய கல்வி அமர்வு ஜூலை 1, 2022 முதல் தொடங்கும். இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாருடன், பான் கார்டை இணைக்காதவர்கள் கவனத்திற்கு – அபராதம் குறித்த முக்கிய அறிவிப்பு!
இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வெயிலுக்கு மத்தியில், பள்ளிகள் செயல்படும் நேரங்களையும் ஹரியானா மாநில பள்ளிக்கல்வித்துறை திருத்தி இருக்கிறது. இந்த திருத்தப்பட்ட அட்டவணையின்படி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி நேரங்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும். இப்போது பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையின் போது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்பதற்கு வசதியாக, ஹரியானா அரசு இலவச டேப்லெட் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் டேப்லெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஹரியானா உட்பட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான கோடை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சில மாநிலங்கள் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்டுவதற்காக கோடை விடுமுறையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.