மே 2 முதல் பள்ளி & கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மே 2ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
கோடை விடுமுறை
நடப்பு கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்க மேற்கு வங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, மாநிலத்தில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மே 2ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, ‘நாங்கள் கடுமையான கோடை வெப்பத்தை அனுபவித்து வருகிறோம். இதுபோன்ற வெயிலுக்கு மத்தியில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
முடிந்தால் பள்ளிகளுக்கு மே 2 முதல் கோடை விடுமுறையைத் தொடங்க கல்வித்துறையிடம் கேட்டுக்கொள்கிறேன். தனியார் பள்ளிகளும் இதே போன்ற நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறி இருந்தார். இப்போது முதல்வரின் இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு, கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மே 2 முதல் ஜூன் 15 வரை கோடை விடுமுறை என்று அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கிறார். இருப்பினும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் கலிம்போங்கில் உள்ள பள்ளிகளில் மட்டும் தற்போதுள்ள கல்வி அட்டவணை அடுத்த உத்தரவு வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது விடுமுறை அறிவிப்புக்கு முன்னதாக கல்வி அமைச்சர் பிரத்யா பாசு, பள்ளிகளில் கோடை விடுமுறையை முன்கூட்டியே அளிப்பது குறித்து சூசகமாக தெரிவித்திருந்தார். அதாவது, ‘உயர் நிலைத் தேர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மே 2ம் தேதி தொடங்கி மே 7ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு மே 7ம் தேதிக்கு பிறகு பள்ளிகளை மூடுவதாக அறிவித்தால் நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.