1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 30 முதல் கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி வரை கடைசி நாள் எனவும் அதன் பின் கோடை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
கோடை விடுமுறை அறிவிப்பு:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பள்ளிகளில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த ஆண்டு கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் பொதுத்தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. அதனால் மாணவர்கள் கடுமையாக பொதுத்தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் 11வது தவணை ரூ.2000 – இகேஒய்சி சரிபார்ப்பு செய்வது எப்படி?
புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த கல்வியாண்டு மாணவர்களுக்கு கால தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், கோடை விடுமுறை குறித்து புதுச்சேரி கல்வித்துறை முக்கிய முடிவை எடுத்துள்ளது. புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அடுத்த கல்வியாண்டிற்கு தகுதி பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்ய அறிவித்துள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 30 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெளியான அறிவிப்பில், அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும், பதவி உயர்வுக்கான விதிமுறைகளின் படி தயார் செய்து, அந்தந்த ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு, மாநில அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி அமர்வுக்கான கடைசி தேதி ஏப்ரல் 29 எனவும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி வேலை நாள் மே 30 மற்றும் 12 ஆம் வகுப்பு மே 28 என தெரிவிக்கப்பட்டுள்ளது.