பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

0
பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கு மே 21 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை – மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக மாநிலங்கள் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ளது. அந்த வகையில் உத்தரபிரதேச மாநில அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கோடை விடுமுறை

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொது மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது. இருப்பினும் கோடை வெயில் வெளுத்து வாங்குவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் மே முதல் வாரத்தில் இருந்து பள்ளி கோடை விடுமுறையைத் தொடங்கியுள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – அமைச்சர் ஆலோசனை!

மாநிலங்கள் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்துள்ள இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைகள் மே 21 முதல் ஜூன் 30 வரை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் நேரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி பள்ளிகள் ஜூன் 18 முதல் 28 வரை கோடை விடுமுறையை தொடங்கும் என்று டெல்லி கல்வி இயக்குநரகம் (DoE) அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் அதிக கற்றல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதை ஈடுசெய்ய டெல்லி பள்ளிகளில் கோடைகால வகுப்புகள் அவசியம் என்று DoE அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. நொய்டா, காசியாபாத், மீரட், ஹாபூர், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோவில் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!