1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே 17 முதல் ஜூன் 4 வரை கோடை விடுமுறை!
மாநிலத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தை கவனத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மே 17 முதல் ஜூன் 4 வரை கோடை விடுமுறை கடைபிடிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கோடை விடுமுறை
மாநிலம் முழுவதும் நிலவிக் கொண்டிருக்கும் கடும் வெயிலைக் கருத்தில் கொண்டு ஜார்க்கண்ட் அரசு மே 17 முதல் ஜூன் 4 வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. இப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல் பருவத் தேர்வு மே 2 முதல் 15ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இது குறித்து ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே கோடை விடுமுறை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளின் ஆண்டு நாட்காட்டியின்படி மே 17 முதல் ஜூன் 4 வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை செயலர் ராஜேஷ் சர்மா தெரிவித்துள்ளார். அந்த வகையில் இப்போது கோடை விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் முதல் பருவத் தேர்வு மே 2 முதல் 15 வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வு இந்த முறை OMR தாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக, மாநிலத்தில் நிலவும் வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களுக்குள் இரண்டு முறை பள்ளி நேரத்தை மாநில அரசு மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் இனி பள்ளிகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை செயல்படாமல் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை செயல்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று ஜார்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ கூறியுள்ளார்.