பள்ளி மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை – மாநில கல்வித்துறை அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையை அடுத்து பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கொரோனா அச்சுறுத்ததால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறையும் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு பாட வாரியாக கால அட்டவணையை வெளியிட்டது.
TNPSC ரூ.71900 சம்பளத்தில் நிர்வாக அதிகாரி வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனை பின்பற்றி அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதனால் விரைந்து தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டது. அதன் படி பஞ்சாப் மாநிலத்தில் மே 14 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில கல்வி அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 15 முதல் மே 31 வரை ஆப்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும்.
மத்திய அரசின் PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.2000 – கால அவகாசம் நீட்டிப்பு!
மேலும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12. 30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். இதனால் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதாவது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கோடை விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.