பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் வெப்பநிலை நிலவி வருவதன் காரணமாக மே 15 முதல் மே 31 வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜூன் 1 முதல் 30 வரை கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வு நடத்தாத காரணத்தினால் மாணவர்களுக்கு கல்வித்திறனும் குறைய ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கோடை விடுமுறையிலும் ஆன்லைன் வகுப்புகள்!
எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் முழுக்க விடுமுறை விடப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு காலம் தாழ்த்தி தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மே மாதம் முழுக்க பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் இழந்த கல்வித்திறனை மீட்டெடுக்க அனைத்து மாநிலங்களிலுமே கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஜூன் 12 வரை மட்டுமே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் மே 31 ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்பட இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மே 15 முதல் மே 31 வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறும் என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.