பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 30 நாட்கள் கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஹரியானா மாநிலத்தில் இயல்பை விட அதிக அளவில் வெப்பம் நிலவி வருவதால், ஹரியானா மாநில அரசாங்கம், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மாணவர்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் பள்ளிக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறை:
கோடைக்காலம் தொடங்கி, அனல் காற்று வீசுவதால் அதில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹரியானா அரசும், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் ஜூன் 1, 2022 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை மூடப்படும். மாணவர்களுக்கான புதிய கல்வி அமர்வு ஜூலை 1, 2022 முதல் தொடங்கும்.
ஜூன் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மேலும் அரசின் இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளும் அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் வெயில் அதிகரித்து வருவதால், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கோடை விடுமுறை உத்தரவுக்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அம்மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலுக்கு மத்தியில், பள்ளிகள் செயல்படும் நேரங்களையும் அரசாங்கம் திருத்தியுள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட அட்டவணையின்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் நேரம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதை அடுத்து ஹரியானா இடைநிலைக் கல்வி வாரியம் (HBSE) 10 மற்றும் 12 வது மாணவர்களின் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும். ஊடக அறிக்கையின்படி, HBSE 10வது 12வது முடிவுகள் ஜூன் 2022க்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான , BSEH 10 வது மற்றும் 12 வது வாரிய முடிவுகளைப் பார்க்க மாணவர்கள் தங்கள் ரோல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.