1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 1 முதல் கோடை விடுமுறை துவக்கம்!
ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனுடன், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
கடந்த ஒரு சில வாரங்களாக மாநிலத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் கோடை விடுமுறை துவங்க இருக்கிறது. இருப்பினும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரு வகுப்பு மாணவர்களும் டேப் மூலம் கல்வியை தொடர இருக்கின்றனர்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை – அதிரடியாக வந்த அறிவிப்பு! காரணம் என்ன?
கோடை விடுமுறைக்கு முன், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் டேப்லெட் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டேப்லெட் வழங்குவது தாமதமாகி பள்ளி மாணவர்களின் ஆன்லைன் கல்வியில் எந்த தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 585 மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்பட உள்ளன. இந்த டேப் விநியோகம் இரண்டு கட்டத்தின் கீழ் நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஏற்கனவே, முதற்கட்டமாக ஒன்றரை ஆயிரம் மாணவர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, மாணவர்களின் படிப்பில் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் டேப்களுடன் சேர்த்து தற்போது சிம் கார்டுகளும் வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், தற்போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இறுதித் தேர்வுக்குப் பிறகு டேப்லெட்டை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தில் முதல் முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறையின் போது வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.