தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கோடை விடுமுறை குறைப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுத் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்க இருப்பதால் இந்த ஆண்டு குறைவான நாட்களே கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம்!
அதன்படி பொதுத்தேர்வினை மாணவர்கள் சுலபமான முறையில் எதிர்கொள்ள முதல் திருப்புதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்த நிலையில் 2ம் திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அண்மையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்துள்ளதாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் மே 12ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டு ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.