தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் கோடை விடுமுறை? அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு இருக்கும் நாள் அன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகத் தான் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும், இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் எனவும், அந்த பொதுதேர்விற்கான தேர்வு அட்டவணையும் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) கிடைப்பது உறுதி?
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வு துவங்க இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் காரணத்தினால் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறுமா என்கிற அச்சம் இருந்தது. இதனையடுத்து தேர்வெழுத இருக்கும் அனைத்து பள்ளிகளிலுமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு அதிக அளவில் வெயில் கொளுத்திக்கொண்டிருப்பதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
Exams Daily Mobile App Download
அதன்படி, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு இருக்கும் நாள் அன்று மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நாளைக்கு தொடங்கி மே 13 ல் முடிவடைகிறது. ஆனால், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் கிடையதாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு இருக்குமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.