மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 முதல் 13 நாட்கள் தான் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக எந்த பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளும் ஆன்லைன் மூலமாக தான் பாடம் நடத்தப்பட்டு வந்தது. அதே போல இரண்டு ஆண்டுகளும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. தேர்வு வைக்காமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள காரணத்தினால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
L&T நிறுவனத்தில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தது.12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேர்வுகள் தாமதமாக மே மாதம் நடைபெறவுள்ளது. இதைப்போல 1 வகுப்பு முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் தாமதமாகவே நடைபெறுகிறது. பள்ளிகளை தாமதமாக திறந்ததால் பாடங்கள் மிக வேகமாக நடத்தி வந்தனர். இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்தில் இருந்தனர். அதனால் அன்பில் மகேஷ் அவர்கள் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது கூறியிருக்கிறார்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!
மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது . 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் கிடையாது. ஆனால் இவர்களுக்கும் மே 13 ஆம் தேதி வரை வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக வேலை நாட்களை குறைக்கும் படி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்திருந்தன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை விடுவது தொடர்பாக இன்று அல்லது நாளை முடிவு எடுக்கப்படும் என கூறினார்.