பள்ளிகளுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை – மாணவர்கள் மகிழ்ச்சி!
பஞ்சாப் மாநிலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 14 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் மாணவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கொரோனா அச்சுறுத்ததால் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் அனைத்து மாநில பள்ளி கல்வித்துறையும் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறைகளும் பாட வாரியாக கால அட்டவணையை வெளியிட்டது.
வளைகுடா மற்றும் ஐரோப்பா நாடுகளில் மே 2 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை – இஸ்லாமியர்கள் மகிழ்ச்சி!
இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு பிறகு கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும் அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை 42.3 டிகிரி செல்சியசும், லூதியானாவில் 43.2 டிகிரி செல்சியஸ் மற்றும் ஜலந்தரில் 42.7 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது. மேலும் சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மற்ற மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெப்பத்தால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான பொற்றோர்களும், ஆசிரியர்களின் ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 14 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.