பள்ளி மாணவர்களுக்கு மே 11 முதல் கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!!
டெல்லியில் மே மாதம் 11 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு கோடை விடுமுறையை அறிவித்துள்ளார் கல்வித்துறை செயலர்.
கோடை விடுமுறை
டெல்லி அரசு மாணவர்களுக்கான கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மே மாதம் 11 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார். முன்னதாக கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர கல்வி அலுவலரின் அறிவிப்பின் படி கல்வி நிறுவன அலுவல்கள், தேர்வுகள், மாணவர் சேர்க்கை சம்பந்தமான பணிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிக்கையில், ‘டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரும் வரையும் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவு எடுக்கப்படமாட்டாது’ என அறிவித்துள்ளார்.
தாஜ்மஹால் மே 15 ஆம் தேதி வரை மூடல் – அரசு உத்தரவு!!
தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் எனவும், உடற்கல்வி, செய்முறை தேர்வுகள், விளையாட்டு போன்ற காரியங்கள் நிமித்தமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடை செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விடுமுறையாக மே 11 முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை செயலர் தகவல் அளித்துள்ளார்.