மே 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மே 2 ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விதர்பா பகுதியை தவிர ஏனைய பகுதிகளில் பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா அச்சம் காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வந்தனர். இதனால் மாணவர்களுக்கு அதிகமாக பாடங்களை நடத்த முடியாமல் இருந்தனர். மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார். 2020ம் ஆண்டு கொரோனா அச்சம் குறைந்த நிலையில் வகுப்பு பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் கோடை விடுமுறை காண பேச்சு வார்த்தையில் இருந்தனர்.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்.26ம் தேதி கடைசி நாள்!
கொரோனா காரணமாக பள்ளிகளுக்கும்,கல்லூரிகளுக்கும் அதிகளவு விடுமுறை விடப்பட்டிருந்தனர். அதனால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 13 முதல் புதிய அமர்வு தொடங்கும் என்றும் விதர்பாவில் உள்ள பள்ளிகள் மட்டும் ஜூன் 27 முதல் மீண்டும் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளைப் பொறுத்தவரை, 1 முதல் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கும் பணிகள் நடைமுறையில் உள்ளன.
இப்போது 1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தவிர, மகாராஷ்டிரா SSC, HSC 2022 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முடிவுகள் மே மாதத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்றும் முடிவு அறிவிப்புக்கான தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.