மே 25 முதல் ஜூன் 19 வரை கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் அதீத வெப்ப காற்று காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இன்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கான தேதிகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் வேகமெடுத்தது. இதனையடுத்து டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு, அரசு, தனியார் அலுவகலங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் வேலை என்று கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. மேலும் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் முறையில் தான் நடந்தது. ஒமைக்ரானால் ஏற்பட்ட மூன்றாவது அலையில் இந்தியாவில் தீவிர நோய் பாதிப்புகள், உயிரிழப்புகள் பெரிதாக கண்டறியப்படவில்லை.
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – அண்ணா பல்கலை 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி!
மேலும் உச்சம் தொட்ட பாதிப்பு நாடு முழுவதுமே குறையத் தொடங்கியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூட வருவதில்லை.
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக பள்ளி குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் இன்டர்மீடியட் படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பின்படி, AP ஜூனியர் கல்லூரிகளுக்கு நாளை (மே 25) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை ஜூன் 19 வரை நீடிக்கும். ஜூன் 20ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வி வாரியம் அறிவித்துள்ளது.