கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 16 வரை கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பள்ளி மற்றும் வெகுஜன கல்வித்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறையை ஜூன் 1 முதல் 16 வரை அளிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை அறிவிப்பு வெளியீடு!
கொரோனா மூன்று அலை தாக்குதலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் பாடங்களை விரைவாக நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த கல்வி இழப்பை ஈடுசெய்ய மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் கோடை விடுமுறையைக் குறைக்க ஒடிசா அரசாங்கம் முடிவு செய்துள்ளது .
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு சாரா பட்டக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சாஸ்வத் மிஸ்ரா, ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 16 வரை வரை மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கோடை விடுமுறை சுமார் 45 நாட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறை குறைக்கப்பட்டதன் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் சரியான நேரத்தில் முடிக்க வேண்டும், தேவைப்பட்டால், கூடுதல் வகுப்புகள் விடுமுறை நாட்களிலும், வேலை நாட்களிலும் போதனை நேரத்தைத் தகுந்தவாறு நீட்டித்து நடத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையைக் குறைப்பதற்குப் பதிலாக கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு இப்போது கூடுதல் விகிதாசார ஊதிய விடுப்புக்கு உரிமை உண்டு என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையைக் குறைத்து அறிவித்தது. பள்ளிகளுக்கு ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை விடுமுறை அளிக்கப்படும். வழக்கமாக, அம்மாநிலத்தில் பள்ளி விடுமுறை 50 நாட்களுக்கு இருக்கும். ஆனால், அது இம்முறை வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு குறைவான கோடை விடுமுறையை அளிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.