தமிழகத்தில் 1 – 9ம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுள்ளது. அத்துடன் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு நாள் அன்று மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதும் என்று அறிவுறுத்தபட்டுள்ளார்கள். இந்த நிலையில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இதில் குறிப்பிட்டுள்ளபடி நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், இன்று 10ம் வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கொண்ட பள்ளிக்கல்வித்துறை இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – அஞ்சல் துறை அறிவிப்பு!
இந்த அறிவிப்பில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கடந்த மே 5ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டார்கள். இதையடுத்து தற்போது 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் அடுத்த கல்வியாண்டு ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.