ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கோடை விடுமுறை – கல்வித்துறை உத்தரவு!
பாகிஸ்தானின் சிந்துவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கோடை விடுமுறை ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கடைபிடிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
உலகம் முழுவதும் நிறைந்து இருந்த கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாணவர்களின் நலன் கருதியும் மூடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வழி கற்றல் மூலம் மாணவர்கள் கற்றல் இழப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டது. இதனால் நோய்த்தொற்று பாதிப்புகள் குறைந்த பின்னர் பள்ளிகள் விரைந்து திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
அதன்படி நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டு தற்போது இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கோடை விடுமுறை ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து கல்வித் துறை பள்ளிகளுக்கான கோடை விடுமுறை அட்டவணையை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, சிந்துவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் கோடை விடுமுறை ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை இரண்டு மாதம் கடைபிடிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
செவ்வாய் கிழமையான இன்று நடைபெற்ற சிந்து கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் (SELD) வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் சையத் சர்தார் அலி ஷா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பள்ளி வாரியங்களின் தலைவர்கள் SELD மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், 4 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான வருடாந்திர தேர்வுகள் மே 2 ஆம் தேதி தொடங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது. புதிய கல்வி ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும் என்றும் வழிநடத்தல் குழு தெரிவித்துள்ளது. கூடுதலாக, குளிர்கால விடுமுறை காலம் டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது.