ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ஜூன் 30 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

ஹரியானா அரசு, ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கும். இந்த அறிவிப்பால் குழந்தைகள் கடும் வெயிலுக்கு மத்தியில் பள்ளிக்கு செல்வதில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.

மாநில அரசு அறிவிப்பு:

டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இயல்பை விட பல மடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹரியானா அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இம்முறை மாநிலம் முழுவதும் வெயில் அதிகரித்து வருவதால், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கோடை விடுமுறைக்காக காத்திருந்தனர்.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – அரசு அளித்த முக்கிய விளக்கம்!

அந்த வகையில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை இருக்கும். முன்னதாக, மே 23 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இந்த தவறான தகவலை ஹரியானா கல்வி வாரிய அதிகாரி ஒருவர் பரப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பாதிப்பால், 2 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை ஈடுசெய்ய கோடை விடுமுறையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்து டேப் மூலம் ஆன்லைனில் படிப்பார்கள் என்ற அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் படிப்பதால் குழந்தைகளின் கல்வி தரம் உயரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், கடந்த முறை வாட்ஸ்அப் குரூப்பில் பாடத்திட்டங்கள் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறை அது நடக்காது, டேப் மூலம் மாணவர் பயன்பாடு மற்றும் ஆசிரியர் பயன்பாட்டில் இருந்து ஆய்வுகள் செய்யப்படும். இந்த செயலியில் ஆசிரியர் எவ்வளவு வேலை செய்தார், மாணவர் எவ்வளவு வேலை செய்தார் என்ற முழுமையான தரவு இருக்கும். இந்நிலையில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் டேப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் மொபைல் சாதன மேலாண்மை மென்பொருளில் இருக்கும் என பள்ளி பொறுப்பாளர் கண்காணிப்பார்.ராஜேஷ்குமார் தொகுத்துள்ளார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!