கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 16 வரை கோடை விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறையை ஜூன் 1 முதல் 16 வரை அளிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கோடை விடுமுறை
பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பை அடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள உயர்கல்வித்துறை இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறையை 16 நாட்களுக்கு மட்டுமே அளிப்பதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களின் துணை வேந்தருக்கு HE துறையின் முதன்மை செயலாளர் சாஸ்வத் மிஸ்ரா எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் உயர்கல்வி வகுப்புகளுக்கான கோடை விடுமுறை சுருக்கமான வகையில் இருக்கும் படி, ஜூன் 1 முதல் ஜூன் 16 வரையுள்ள காலங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். இந்த கோடை கால விடுமுறைக்கு முன்னதாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இந்த கல்வியாண்டுக்கான நிகழ்வுகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தேவை ஏற்பட்டால் பாடத்திட்டங்கள் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காக விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் வகுப்பு நேரத்தை கூடுதலாக எடுத்துக்கொள்ளலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசு துறையில் பணிபுரிய மீண்டும் வாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இதனை தொடர்ந்து தற்போது அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 16 வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒடிசா மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாநில பள்ளி மற்றும் வெகுஜனக் கல்வித் துறையின் முடிவின்படி, இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஜூன் 6 முதல் 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும் பள்ளிகள் ஜூன் 17, 2022 முதல் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, அம்மாநிலத்தில் பள்ளி விடுமுறை 50 நாட்களுக்கு இருக்கும். ஆனால், அது இம்முறை வெறும் 10 நாட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.