ஏப்ரல் 30 முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் இயங்கி வரும் மதுரை கிளைக்கு நாளை (ஏப்ரல்.30) முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, மதுரை, சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இந்த கோடை வெயிலின் தாக்கம் நேற்று (ஏப்ரல்.28) 100 டிகிரியை தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை அடுத்த மாதத்தில் இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இயங்கி வரும் மதுரை கிளைக்கு நாளை (ஏப்ரல்.30) முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகங்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மூடப்படுவது வழக்கம். இந்த காலகட்டங்களில் ஒரு சில முக்கியமான வழக்குகள் மட்டுமே நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் கோடை காலத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளை (ஏப்ரல்.28) முதல் ஜூன் 5ம் தேதி வரை மூடப்படும் என பதிவுத்துறை அறிவித்தது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு தொடர்பான விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – குறைந்த வட்டியில் வழங்கும் வங்கிகள்!
அந்த வகையில், மதுரை கிளையில் விடுமுறை காலத்தில் வரும் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரந்தோறும் மூன்று நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மே மாதத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் மனுக்கள் மீதான விசாரணை, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் எனவும் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதில் மே முதல் வாரத்தில் மட்டும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும் விசாரணை வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.