மே 6 முதல் ஜூலை 3 வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – முதல்வர் முக்கிய உத்தரவு!
வழக்கத்திற்கும் மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினாலும் மே 6 ஆம் தேதி முதல் ஜூலை 3 வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என முதல்வர் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை:
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசும் பலவிதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாகத் தான் வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படாமலேயே அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு கண்டிப்பாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கான பொதுத்தேர்வு அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் பொதுத்தேர்வு நடைபெறுமா என்கிற அச்சம் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் மே 6-ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க கோரி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காலை 7 மணிமுதல் 12 மணிவரை பள்ளிகள் திறப்பு!
மேலும் பள்ளி விடுமுறை முடிந்து ஜூலை 4-ஆம் தேதி வழக்கம் போல பள்ளி தொடங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 4ஆம் தேதிக்குள் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடித்துவிட வேண்டும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் மே 6 முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலும் கூட மே 20 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.